ஷா ஆலம், ஆக 26- நாட்டில் நேற்று புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை மூவாயிரத்தைக் கடந்து 3,206 ஆகப் பதிவானது. இவற்றில் நான்கு சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் மூலம் பரவியவையாகும்.
இந்நோய் காரணமாக நேற்று மொத்தம் எட்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மொத்தம் 36,185 பேர் இதுவரை மரணமடைந்துள்ளனர்.
மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 68 ஆயிரத்து 394 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், நேற்றைய நிலவரப்படி 2,180 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 96 ஆயிரத்து 221 ஆக உள்ளது.