ECONOMYHEALTHMEDIA STATEMENT

கோவிட்-19 எண்ணிக்கை 2,240 ஆக குறைந்தது- ஒன்பது மரணங்கள் பதிவு

ஷா ஆலம், செப் 4- நாட்டில் நேற்று 2,240 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 2,328 ஆக இருந்தது.

நேற்று பதிவான தொற்றுகளில் நான்கு வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம்  அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

புதிதாக நோய் கண்டவர்களுடன் சேர்த்து நாட்டில் கோவிட்-19 நோய்க்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்து 51 ஆயிரத்து 459 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 நோயினால் நேற்று ஒன்பது பேர் உயிரிழந்தனர். அவற்றில் இரண்டு மருத்துவமனைக்கு வெளியே நேர்ந்த மரணங்களாகும்.

தற்போது மொத்தம் 1,305 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 75 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் 18 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை மொத்தம் 36,243 பேர் கோவிட்-19 நோய்க்கு பலியாகியுள்ள வேளையில் 47 லட்சத்து 23 ஆயிரத்து 112 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


Pengarang :