ECONOMYHEALTHNATIONAL

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று 1,483 ஆக குறைந்தது

ஷா ஆலம், செப் 6- கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நாட்டில் தொடர்ந்து இறக்கம் கண்டு வருகிறது. நேற்று இந்த எண்ணிக்கை 1,483 ஆகப் பதிவானது. நேற்று பதிவான நோய்த் தொற்றுகளில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து  வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன.

கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை  நேற்று முன்தினம் 1,903 ஆகவும் கடந்த 3ஆம் தேதி 2,240 ஆகவும் 2ஆம் தேதி 2,328 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 92 ஆயிரத்து 942 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே, கோவிட்-19 தொற்று தொடர்புடைய நான்கு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டன. இதனுடன் சேர்த்து இந்நோய்க்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36,249 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 2,897 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்த வேளையில் நோயிலிருந்து விடுபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47, லட்சத்து 29 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது.


Pengarang :