ECONOMYHEALTHSELANGOR

சுகாதாரத் பரிசோதனைத் திட்டம் ரத்து செய்யப்பட்டது, பங்கேற்பாளர்கள் புதிய இடத்தைத் தேர்வு செய்யும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்

ஷா ஆலம், செப்டம்பர் 8: இந்த சனிக்கிழமையன்று பாயா ஜாராஸ் மாநில சட்டமன்ற தொகுதியில்   மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினரின் அறிவிப்பு  படி, தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

“சனிக்கிழமை நிகழ்ச்சியின் இருப்பிடத்திற்கு பதிவு செய்த பங்கேற்பாளர்கள் தங்கள் செலாங்கா செயலியில் புதிய  சோதனை இடத்தை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று டாக்டர் சித்தி மரியா மாமூட் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

மேலும் தகவலுக்கு, https://selangorsaring.selangkah.my/ ஐப் பார்வையிடவும்.


Pengarang :