ECONOMYSELANGOR

கார் நிறுத்துமிட சம்மன்களுக்கான அபராதக் கழிவு ஆண்டு இறுதி வரை நீட்டிப்பு

ஷா ஆலம், செப் 12- வாகன நிறுத்துமிட அபராதத் தொகைக்கு கழிவு வழங்கும் சலுகை இவ்வாண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என்று கோல லங்காட் நகராண்மைக் கழகம் அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரைக்குமான காலக்கட்டத்தில் பெறப்பட்ட சம்மன்களுக்கு வெறும் 10.00 வெள்ளி அபராதமும் 2019 ஆம் ஆண்டிற்கு முன்பு வழங்கப்பட்ட சம்மன்களுக்கு 15 வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என அது தெரிவித்தது.

நிலுவையில் உள்ள கார் நிறுத்துமிட அபராதத் தொகையை விரைந்து செலுத்துங்கள். சம்மன்கள் தொடர்பான விபரங்களை ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம் என நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பொது மக்கள் ரொக்கமாக, கிரடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலமாக கட்டண முகப்பிடங்களிலும் ஜோம்பே மற்றும் இணையம் வாயிலாகவும் செலுத்தலாம்.

மேல் விபரங்களுக்கு 03-31811809 என்ற எண்களில் அல்லது https://www.mpkl.gov.my  என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :