ECONOMYSELANGOR

அனிஸ் ஐந்து கை தொழில் பயிற்சிகளை ஏற்பாடு செய்து, ஊனமுற்ற இளையோருக்கு  தொழில் செய்ய உதவுகிறது

ஷா ஆலம், செப்டம்பர் 20: சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (அனிஸ்) கற்றல் குறைபாடுகள் உள்ளவர்கள் (OKU) கற்றல் சிக்கல்களினால் தங்கள் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கு,  உதவும் வகையில் பலதரப்பட்ட தொழில் திறன் படிப்பை ஏற்பாடு செய்கிறது.

தையல், பேக்கரி, அலுவலக மேலாண்மை, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற படிப்புகள் சம்பந்தப்பட்ட குழுவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை செய்ய உதவும் என்று நிறுவனம் நம்புகிறது.

பதிவு திறக்கப்பட்டுள்ளது மற்றும் விண்ணப்பதாரர்கள் கீழ்வரும் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • வயது 17 முதல் 22 வயது வரை
  • கற்றல் சிக்கல்கள் உள்ளவர்கள்
  • தங்களை நிர்வகிக்க முடியும்
  • நிறைவு 3M (படித்தல், எழுதுதல், கணக்கிடுதல்)
  • விண்ணப்பதாரரின் தாய் / தந்தை / பாதுகாவலர் சிலாங்கூர் வாக்காளராக இருக்க வேண்டும்

தகுதியுடையவர்கள் http://www.anisselangor.com/sediakerja என்ற இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் 03-5545 3170 என்ற எண்ணில் அல்லது அனிஸின் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராமில் நேரடி செய்தி மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

ஆகஸ்ட் 16 அன்று, சிலாங்கூர் அரசாங்கம் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி மற்றும் திறன்களை வழங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சுய வாழ்க்கை ஆதரவு மையத்தை (ILSC) நிறுவ உத்தேசித்துள்ளது.

பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட், சமூக நலத் துறை மற்றும் தொடர்புடைய அரசு சாரா நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட மையத்தை நிறுவும் இடத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.


Pengarang :