ஷா ஆலம், செப் 20: கடந்த 2021 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய சிலாங்கூர் அதிகாரமளித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு (ஐ-சீட்) திட்டம் பின்தங்கிய இந்திய தொழில் முனைவோர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாங்கள் அவர்களுக்கு தேவையான வணிக உபகரணத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தாலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த விண்ணப்பதாரரின் சட்டமன்ற தொகுதி இந்திய சமுகத் தலைவர் உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும் உபகரணங்கள் நில அலுவலகத்தால் வாங்கப்படுகின்றன இந்திய சமூக-பொருளாதார மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.
இந்த திட்டத்தின் வெற்றியை கொண்டாடும் அதே வேளையில் இது போன்ற திட்டங்களை பிரபல படுத்தவும், அத்திட்டங்கள் பற்றி மற்றவர்களும் அறிந்துகொண்டு பங்கேற்க வசதியாக ஐ-சீட் தீபாவளி கார்னிவல் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுக்கு காட்ட விரும்புகிறோம். அதனால், முதல் முறையாக மெகா ஐ-சீட் கார்னிவலை கிள்ளான் செட்டி பாடாங்கில் இந்த ஆண்டு தீபாவளிக்கு நடத்த உள்ளோம் என்றார்.