ECONOMYSELANGOR

தீபாவளிக்கு விவசாய கழிவு, பழைய தட்டுமுட்டு பொருட்களை அகற்றுவதற்கு, எம்பிஎச்எஸ் இல் 30 தொட்டிகள் தயாராக உள்ளன

ஷா ஆலம், அக் 3: தீபாவளியை ஒட்டி வீடுகளில் நடக்கும் துப்புரவு பணிகளின் போது பழைய மரச்சாமான்கள், மின்சாதனப் பொருட்கள், தோட்டக்கழிவுகள் என மொத்த கழிவுகளை அகற்ற வசதியாக மொத்தம் 30 ரோல் ஓன் ரோல் ஓப் (ரோரோ) தொட்டிகள் தயார்படுத்தப் பட்டுள்ளன.

உலு சிலாங்கூர் முனிசிபல் கவுன்சில் (எம்பிஎச்எஸ்) 3 டன் எடையுள்ள தொட்டிகள் பாத்தாங் காலி, புக்கிட் பெருந்துங், புக்கிட் செந்தோசா, கோலா குபு பாரு மற்றும் பல பகுதிகளில் இருப்பதாகக் கூறியது.

பேஸ்புக்கில் உள்ள தகவல்களின்படி, இலவச சேவை நாளை சனிக்கிழமை வரை பட்டியலிடப்படும் இடங்களில் கட்டம் கட்டமாக தொடங்கும்.

“காண்ட்ராக்டர்கள் எளிதாக வீட்டு கழிவுகளை சேகரித்து சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் வசதியாகவும் வைத்திருக்கும் வகையில் வழங்கப்படும் ரோரோ தொட்டிகளில் மொத்த கழிவுகளை வீசுவதன் மூலம் குடியிருப்பாளர்கள் ஒத்துழைப்பார்கள் என்று எம்பிஎச்எஸ் நம்புகிறது,” என்று அவர் கூறினார்.

உணவுக் கழிவுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் போன்ற வீட்டுத் திடக்கழிவுகளை குப்பைத் தொட்டியில் வீச வேண்டாம் என்றும் ஊராட்சி மன்றம் பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

ரோரோ பின் சேவை தொடர்பான ஏதேனும் கேள்விகள் இருந்தால், எம்பிஎச்எஸ் திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொது சுத்தம் துறையை 03-6064 1331 அல்லது 03-6064 1050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


Pengarang :