ECONOMYNATIONAL

15வது பொதுத் தேர்தல் வேட்புமனு நவம்பர் 5, வாக்குப்பதிவுக்கு நவம்பர் 19 தேதி

புத்ராஜெயா, 20 அக்: 15வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தேதி நவம்பர் 5-ஆம் தேதியும், முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 15-ஆம் தேதியும் வாக்குப்பதிவுக்கு நவம்பர் 19ஆம் தேதி என தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) நிர்ணயித்துள்ளது.

தேர்தலை செயல்படுத்துவது நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற நிலை மற்றும் பேராக், பகாங் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநில சட்டமன்றத்தை கலைத்த மாநிலங்களுக்கான தேர்தலும், சபா புக்காயா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரு சேர நடக்கும் என அறிவித்தது.

தேர்தல் தொடர்பான சிறப்பு தேர்தல் ஆணையக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அக்டோபர் 10-ஆம் தேதி 14-வது நாடாளுமன்றம் கலைக்க யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் ஒப்புதல் பெற்ற பிறகு, 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.


Pengarang :