ECONOMYNATIONAL

புத்ராஜெயா கைப்பற்றப்பட்டால் அன்வார் பிரதமராவார் என்று ஹராப்பான் அறிவித்தது

ஈப்போ, அக் 21: 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், வருங்கால பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெயரை பக்காத்தான் ஹராப்பான் அறிவித்துள்ளது.

இன்று இரவு ஈப்போ மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஹராப்பான் மாநாட்டில் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

கூட்டமைப்பில் உள்ள நான்கு பிரதான கட்சிகளிடையே   அனைத்து நாடாளுமன்ற ஆசனங்களுக்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விழாவில், நாடு முழுவதிலுமிருந்து 7,000க்கும் மேற்பட்ட ஹராப்பான் உறுப்பினர்கள், அதன் துணைத் தலைவர் முகமது சாபு, அந்தோனி லோக் சியூ ஃபூக் மற்றும் டத்தோஸ்ரீ வில்பிரட் மேடியஸ் டாங்காவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :