ECONOMYSELANGOR

15வது பொதுத் தேர்தலில்: கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் போட்டியிடுகிறார்

ஷா ஆலம், அக்டோபர் 27 – சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான மாநில செயற்குழு உறுப்பினர் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ், கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதிக்கு 15வது பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

நேற்றிரவு நிதி திரட்டும் விருந்தின் போது DAP பொதுச்செயலாளர் அந்தோனி லோக் இந்த அறிவிப்பை வெளியிட்டார், அவர் வரவிருக்கும் தேர்தலில் சிலாங்கூரில் உள்ள 22 நாடாளுமன்ற இடங்களில் நான்கில் அவர் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்தார்.

வேட்பாளர்கள் மற்றும் இடங்கள் பின்வருமாறு:

  • கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில், சார்லஸ் சாண்டியாகுவுக்குப் பதிலாக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ்.

  • டாமன்சாராவிற்கு சிலாங்கூர் DAP தலைவர் கோபிந்த் சிங் டியோ, தோனி புவாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்

  • பூச்சோங்கிற்கு முன்னாள் மத்திய மந்திரி யோ பீ யின், கோபிந் சிங்குக்கு பதிலாகவும்

  • பாங்கி ஓங் கியான் மிங்கிற்குப் பதிலாக அத்தொகுதியில் சியாஹ்ரெட்சன் ஜோஹான் போட்டியிடவுள்ளார் என அறிவித்தார்.

Pengarang :