ECONOMYSELANGOR

கோம்பாக் தொகுதியின் கௌரவத்தை மீட்டெடுப்பேன்- அமிருடின் உறுதி

ஷா ஆலம், நவ 8– கோம்பாக் தொகுதி மக்களின் நலன் மற்றும் மேம்பாட்டை தாம் தொடர்ந்து உறுதி செய்யவுள்ளதாக அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதியளித்துள்ளார்.

தாம் போட்டியிடும் அத்தொகுதி தொடர்ந்து கௌரவத்துடனும் தராதரத்துடனும் இருப்பதை உறுதி செய்வதும் தமது கடமையாகும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் தெரிவித்தார்.

கோம்பாக் தொகுதிக்கு குறிப்பாக பத்து கேவ்ஸ் என முன்பு அழைக்கப்பட்ட சுங்கை துவா தொகுதி மக்களுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அறிமுகமான நான், உங்கள் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.

சிறப்பான, பரிவான மற்றும் ஆக்ககரமான சேவையை வழங்கியுள்ள தமது குழு தொலைநோக்கு கொண்ட இளம் தலைமுறையினரை இம்முறை முன்நிறுத்தியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

கோம்பாக் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். ஹராப்பானுடன் இணைந்து சிறப்பான எதிர்காலத்தை கோம்பாக்கிற்கு ஏற்படுத்துவோம். நம்மால் முடியும் என்று அவர் அந்த காணொளியில் தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவருமான அமிருடின் இத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் இரண்டாம் எண்ணைப் பெற்றுள்ளார்.

கெஅடிலான் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களை அமிருடின் கோம்பாக் தொகுதியில் எதிர்கொள்கிறார்.


Pengarang :