ECONOMYHEALTHSELANGOR

இதுவரை இலவச காப்பீடு திட்டத்தில் 596,932 நபர்கள் பதிவு செய்துள்ளனர் – எம்பி

ஷா ஆலம், நவ. 9: நேற்றைய நிலவரப்படி சிலாங்கூர் பொதுக் காப்பீட்டுத் திட்டத்திற்கு (இன்சான்) மாநில அரசு மொத்தம் 596,932 பதிவுகளைப் பெற்றுள்ளது.

டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, 500,000-க்கும் அதிகமானோர் தன்னியக்கமாக அல்லது ஆன்லைன் வாயிலாக  பதிவு செய்ததாகக் கூறினார்.

மாநிலத்திலுள்ள 60 லட்சம் பேர் பயன்பெறும் வகையில் இந்த இன்சான் காப்புறுதி  திட்டம் அமல்படுத்தப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி அறிவித்திருந்தார்.

சுமார் 6,000 கோடி வெள்ளி மதிப்புள்ள காப்புறுதி பாதுகாப்பை கொண்ட இத்திட்டத்தின் மூலம் விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு மற்றும் நிரந்தர உடல் செயலிழப்புக்கு 10,000 வெள்ளி வரை இழப்பீடு பெற முடியும்


Pengarang :