ECONOMYMEDIA STATEMENT

பழுதடைந்த அரசாங்க கட்டிடங்களை தரம் உயர்த்துவேன், அரசு ஊழியர்கள் நலன் காப்பேன்- டாக்டர் சத்தியா உறுதி மொழி

உலு சிலாங்கூர், நவ 16- மிகவும் மோசமான நிலையிலிருக்கும் அரசாங்கக் கட்டிங்களை தரம் உயர்த்தும் எண்ணத்தை உலு சிலாங்கூர் தொகுதிக்கான ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் முன்வைத்துள்ளார்.

மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றுவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய உகந்த சூழலில் பணி புரியும் உரிமை  அரசு ஊழியர்களுக்கு உள்ளது என்று அவர் சொன்னார்.

அரசாங்கத்தின் சேவையை மக்களிடம் சேர்க்கும் இணைப்பு பாலமாக அரசாங்க ஊழியர்கள் விளங்குவதால் அவர்களின் நலனில் கவனம் செலுத்தப்படுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அரசு ஊழியர்களுக்கு தேவையானது என்ன? அலுவலகங்களில் அதிகரிக்கப்பட வேண்டிய அம்சங்கள் யாவை? என்பதைக் கண்டறிய தாம் களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

கோல குபு பாருவிலுள்ள அரசாங்க அலுவலகங்கள் பலவற்றில் தாம் மேற்கொண்ட ஆய்வில் பழைய கட்டிடங்களின் வரலாற்றுக் கூறுகள் சிதைக்கப்படாமல் அவை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இத்தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அரசு ஊழியர்களின் நலனில் தாம் பரிவு கொண்டு அவர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான தீர்மானத்தை தாம் முன்மொழியவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

 


Pengarang :