ஷா ஆலம், நவ 25- சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்குவிப்பு தொகையாக இரண்டரை மாத சம்பளம் அல்லது குறைந்த பட்சம் 1,000 வெள்ளி வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்த போனஸ் தொகை டிசம்பர் மாதம் 29ஆம் தேதியும் அடுத்தாண்டு பிப்ரவரி மாதமும் கட்டங் கட்டமாக வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த போன்ஸ் வழங்கும் திட்டம் 3 கோடியே 76 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளி நிதிச் செலவினத்தை உட்படுத்தி இருக்கும் என்று மாநில சட்டமன்றத்தில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.