ECONOMY

காவல்துறையினருக்கு சம்பள உயர்வு : தவறான செய்தி

கோலாலம்பூர், நவ 30: பிடிஆர்எம்க்குச் சம்பள உயர்வு விரைவில் அறிவிக்கப்படும்’ எனும் தலைப்பில் சமூக வலைதளங்களில் பரவி வரும் அறிக்கையைப் பிரதமர் துறை இன்று மறுத்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததன் மூலம் அவ்வறிக்கைத் தவறானது என்று கூறினார்.

நிச்சயமற்ற அல்லது தவறான தகவல்களை பரப்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று ஜேபிஎம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது.

உண்மையான செய்திகளுக்கு ஜெபிஎம்யின் அதிகாரப்பூர்வச் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்க்கவும்; அவை முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டோக்,” என்று அவர் குறிப்பிட்டார்.

-பெர்னாமா


Pengarang :