ECONOMY

பள்ளிக்குத் திரும்பும் உதவி திட்டத்திற்கான ஒதுக்கீடு மாநிலச் சட்டமன்றங்களுக்கு (டுன்) அடுத்த வாரம் வழங்கப்படும் 

ஷா ஆலம், டிச 9: சிலாங்கூர் மந்திரி புசார் அல்லது எம்பிஐயின் கீழ் பள்ளிக்குத் திரும்பும் உதவி திட்டத்திற்கான ஒதுக்கீட்டை மாநில சட்டமன்றங்கள் (டுன்) அடுத்த வாரம் பெறும்.

அதன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புத் தலைவர், நவம்பர் மாத இறுதி வரை, 40க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள்   வெள்ளி RM30,000 ரம் மதிப்பிலான விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதாகக் கூறினார்.

“இப்போது ஆவணங்களை மறு ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதை முடிக்க நாளை வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது,“ என்றார்.

“தகுதியான பெறுநருக்கு அவ்வுதவியை வழங்கும் நடவடிக்கை மாநில சட்டமன்றத்தால் தீர்மானிக்கப்படுகிறது” என்று அஹ்மத் அஸ்ரி ஜைனால் நோர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

ஒவ்வொரு மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 300 மாணவர்களின் பள்ளித் தேவைகளைப் பூர்த்தி செய்ய RM100 உதவி வழங்கப்படும்.

நவம்பர் முழுவதும் அவ்வுதவிக்கான விண்ணப்பம் திறந்திருந்தது. RM4,000க்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என வரம்பு அமைக்கப்பட்டு இருந்தது.


Pengarang :