ALAM SEKITAR & CUACANATIONAL

உலு திரங்கானுவில் திடீர் வெள்ளம்- 43 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம்

கோல திரங்கானு, ஜன 13- உலு திரங்கானுவில் நேற்று ஏற்பட்ட திடீர்
வெள்ளத்தைத் தொடர்ந்து தற்காலிக நிவாரண மையம் ஒன்று
திறக்கப்பட்டு அதில் 43 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கம்போங் உலு கிராமாட் பாலாய் ராயாவில் அமைக்கப்பட்டுள்ள அந்த
துயர் துடைப்பு மையத்தில் நேற்றிரவு 10.00 மணியளவில் 15 குடும்பங்கள்
அடைக்கலம் புகுந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின்
செயலகம் கூறியது.

சம்பந்தப்பட்ட குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில்
திடீரென வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும்
தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர்.


Pengarang :