ACTIVITIES AND ADSECONOMY

கோவிட்-19 : நேற்று 202 பேர் பாதிப்பு, இரு மரணச் சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 31- நாட்டில் நேற்று 202 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர்  வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாவர்..

இந்த நோய்த்தொற்றுடன் தொடர்புடைய இரு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானதாக என்று சுகாதார அமைச்சின் கொவிட் நவ் அகப்பக்கம் கூறியது. இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 36,942 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 141 பேர் குணமடைந்தனர்.

நேற்றைய நிலவரப்படி 9,598 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 9,135 பேர் அல்லது 95.8 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 381 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 23 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 12 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :