MEDIA STATEMENT

பத்து வயது சிறுவன் கால்வாயில் மூழ்கி மரணம்- மற்றொரு சிறுவனைக் காணவில்லை

கோலாலம்பூர், பிப் 12 - கால்வாயில் பெருக்கெடுத்து ஓடிய நீரில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயதுச் சிறுவன் மூழ்கி மாண்டது உறுதி செய்யப்பட்ட வேளையில் மற்றொரு சிறுவனைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் அம்பாங்,  ஜாலான் யுகே பெர்டானாவில் நேற்று மாலை நிகழ்ந்தது.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர் 10 வயதான முகமமது ரிகுல்லா முகமட் ஷாபி என அடையாளம் காணப்பட்டுள்ளார். எட்டு வயதுடைய வான் முகமது அம்மார் வான் முகமட் நூர் ஹபிஸான் என்றச் சிறுவனை இன்னும் காணவில்லை.

நேற்று மாலை 4.44 மணியளவில் தங்களுக்கு இச்சம்பவம் தொடர்பில்  அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் தோராஸாம் காமிஸ் கூறினார்.

மாலை 5.08 மணியளவில் சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக கூறிய அவர், காணாமல் போன சிறுவனைத் தேடும் பணி தொடர்கிறது என்றார்.

Pengarang :