ALAM SEKITAR & CUACA

சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க கண்காணிப்பு கேமரா- அரசுக்கு பரிந்துரை

செலாயாங், பிப்ர 18- கோம்பாக்கில் உள்ள கம்போங் தெங்காவில் பொறுப்பற்ற தரப்பினர் சட்டவிரோதமாக குப்பைகளைக் கொட்டும் பிரச்சினையை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இரகசிய கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி வி.) அமைக்கும் திட்டம் ஒன்றாகும்.

இது ஒரு உறுதியான சிறப்பான யோசனை என்றும் ஊராட்சி மன்றங்கள் மற்றும் பொதுப்பணித் துறை இது குறித்து ஆலோசிக்க வேண்டும்  என்றும்   கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவன வர்த்தக மற்றும் தொடர்புப் பிரிவு துணை நிர்வாகி மாபுசா முகமது தர்மிடி தெரிவித்தார்.

எங்களைப் பொறுத்தவரை இது சிறந்த வழியாகும். சி.சி.டி வி.களை நிறுவுவது மற்றும் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் இடங்களை மூடுவது போன்றவை 
 இப்பிரச்சனை மீண்டும் வராமல் தடுக்கப்பதற்கான சரியான நடவடிக்கையாகும் என்று அவர் சொன்னார்.

தற்போதைக்கு, பொறுப்பற்ற நபர்கள் குப்பைகளைக் கொட்டுவதைத் தடுக்க மஞ்சள் நாடாவை சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டியுள்ளோம் என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார் .

கப்போங் தெங்கா பகுதியில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் நடவடிக்கையை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமும் செலாயாங் நகராண்மைக் கழகமும் கடந்த புதன் கிழமை மேற்கொண்டன.

Pengarang :