ANTARABANGSAECONOMY

மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்படும்

பெட்டாலிங் ஜெயா, பிப் 26- பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கட்சிகளை உட்படுத்திய மாநிலத் தேர்தல்களுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வரும் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும்.

இவ்விகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களுடன் நடத்தப்பட்டு விட்டதாக கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் ஃபஹாமி ஃபாட்சில் கூறினார்.

இந்த பேச்சு வார்த்தையின் முடிவுகள் மார்ச் மாத இறுதியில் அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். எல்லா மாநிலங்களும் ஏக காலத்தில்  அறிவிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. சில மாநிலங்கள் முன் கூட்டியும் சில தாமதமாகவும் வெளியிடலாம் என்றார் அவர்

எது எப்படி இருப்பினும், ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகத்திடம் இருந்து இதன் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இங்குள்ள டி.எச். ஹோட்டலில் நடைபெற்ற கெ அடிலான் கட்சியின் தகவல் பிரிவை வலுப்படுத்துவது தொடர்பான மாநாட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஜூன் மாதத்தின் கடைசி இரு வாரங்களில் சட்டமன்றத்தைக் கலைக்க ஐந்து மாநிலங்களுடன் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில தலைமைத்துவ மன்றத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக கூறியிருந்தார்.



Pengarang :