கோலசிலாங்கூர், மார்ச் 23 ;- சிலாங்கூர் மாநில அரசின் மைசெல் இயக்கம் கோல சிலாங்கூர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் அடையாளப் பத்திர விவகாரத்திற்கு தீர்வு காண மாபெரும் இயக்கத்தை நடத்துகிறது.
அது எதிர்வரும் – 26/03/2023 -ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
காலை 10:00 -5:00 மாலை மணி வரை
இடம்- கோலசிலாங்கூர் அசாம் ஜாவா மண்டபம்
இங்கு அடையாள அட்டை,சிவப்பு நிற அடையாள அட்டை , பிறப்பு பத்திரம், பிள்ளை தத்தெடுத்தல் விவகாரம், குடியுரிமை விவகாரம் போன்ற விவகாரங்களை எதிர்நோக்கும் பொது மக்கள், அவர்களிடம் உள்ள ஆவணங்களுடன் மைசெல் அதிகாரிகளை அணுகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.