MEDIA STATEMENTNATIONAL

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணைய  பணிகளை  செம்மை படுத்த  இரண்டு புக்கிட் அமான்  அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.

கோலாலம்பூர், ஏப்ரல் 4: சமூக ஊடகங்களில் உள்ளடக்கம் தொடர்பான விசாரணை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தும் முயற்சியாக இரண்டு புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) அதிகாரிகள் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தில் (SKMM) நியமிக்கப்படுவார்கள்.

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தின் முகநூல் ஒரு பதிவில், ஏஜென்சியில் காவல்துறை அதிகாரிகளை பணியமர்த்துவது புலனாய்வு, விசாரணை மற்றும் வழக்குத் தொடரும் அம்சங்களில் இரு அமலாக்க நிறுவனங்களின் திறன்களையும் நிபுணத்துவத்தையும் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.

மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் சலீம் ஃபதே தின் மற்றும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன் இடையே நடந்த சந்திப்பின் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டது.

“இனம், மதம் மற்றும் அரச நிறுவனங்கள் (3R) தொடர்பான சமூக ஊடக உள்ளடக்கம் தொடர்பான விசாரணை மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கூட்டம் விவாதித்தது.

“இந்த வகையான ஒத்துழைப்பு அதிகாரமளித்தல் அவ்வப்போது செயல் படுத்தப்படும், அத்துடன் தேசியச் சட்டத்தின் விதிகளை அமல் படுத்துவதில் சமீபத்திய தேவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும்”, என மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் தெரிவித்தது.

 

– பெர்னாமா


Pengarang :