ACTIVITIES AND ADSMEDIA STATEMENT

சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 14-  இங்குள்ள பத்து கேவ்ஸ்,  தாமான் செலாயாங் ஜெயாவில் உள்ள  குழந்தை பராமரிப்பாளரின் வீட்டில் சுயநினைவின்றி காணப்பட்ட நான்கு மாத ஆண் குழந்தை செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

 செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தை ஏப்ரல் 12 ஆம் தேதி காலை 11.53 மணியளவில்  இறந்துவிட்டது மருத்துவ அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது என்று கோம்பாக் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜைனல் முகமது முகமது கூறினார்.

 பிரேதப் பரிசோதனையில் பிறவி இதயக் குறைபாடு காரணமாக அக்குழந்தை இறந்தது உறுதி என்று அவர் தெரிவித்தார்.

47 வயதான குழந்தையின் பராமரிப்பாளர் நேற்று காலை 11.00 மணியளவில் குழந்தையை எழுப்ப முயன்றபோது குழந்தை சுயநினைவின்றி காணப்பட்டுள்ளது.

அந்த பராமரிப்பாளர்  குழந்தையின் நிலையை தெரிவிக்க அவரின் தாயை உடனடியாகத் தொடர்பு கொண்டார் என்று ஜைனல் இன்று ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.

போலீசார் இந்த சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளனர் மேலும் மேலும் தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி ஜே.வின்சன் ஜோசப்பை 016-2335454 அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 03-61262222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Pengarang :