ECONOMY

தீராத அச்ச உணர்வா? உடனே சேஹாட் ஆலோசகரை நாடுங்கள்- சித்தி மரியா ஆலோசனை

ஷா ஆலம், ஏப் 21- தீராத மனப்பயத்தில் வாடுகின்ற மற்றும் அந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு வழியை தேடுகின்ற நபர்கள் சேஹாட் எனப்படும் சிலாங்கூர் அரசின் மனநல ஆலோசக சேவையைப் பெறும்படி கேட்டுக கொள்ளப்படுகின்றனர்.

வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய மனநலக் குறைபாடுகளை அப்படியே விட்டு விட முடியாது என்று பொது சுகதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அளவுக்கு மீறிய அச்ச உணவும் மனக்கவலையும் தொடரும் பட்சத்தில் அது வாழ்க்கையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மனக்கவலையை எங்களிடம் தெரிவியுங்கள். நாங்கள் காது கொடுத்து கேட்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறினார்.

சேஹாட் ஆலோசகர்களை 1700-82-7536 அல்லது 1700-82-7537 என்ற எண்களில், செலங்கா செயலி வாயிலாக அல்லது http://www.drsitimariah.com/sehat என்ற அகப்பக்கம் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

அரசாங்கத்தின் முழு செலவிலான இந்த சேஹாட் திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆலோசக சேவையை மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சித்தி மரியா முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :