புத்ராஜெயா, மே 29- கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான மலேசிய சான்றிதழ் தேர்வு (எஸ்.பி.எம்.) முடிவுகள் வரும் ஜூன் மாதம் 8ஆம் தேதி வெளியாகும் என கல்வி அமைச்சு கூறியது.
தேர்வை எழுதிய மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முடிவுகள் தபால் மூலம் அறிவிக்கப்படும். தேர்வை எழுதுவதற்கு பதிவு செய்த மாநில கல்வி இலாகாவை தொடர்பு கொண்டும் அவர்கள் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.
பள்ளியில் அல்லது தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்கள் myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாக 2022ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். முடிவுகளை ஜூன் 8ஆம் தேதி காலை 10.00 மணி முதல் ஜூன் 14ஆம் தேதி மாலை 6.00 மணி வரை முடிவுகளை அறிந்து கொள்ள முடியும்.
இது தவிர எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவையைப் பயன்படுத்தியும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை பெற இயலும்.
2022ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம். தேர்வை 403,637 மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள 3,355 மையங்களில் எழுதினர்.