ANTARABANGSAECONOMY

கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவில் ஆடவர் கொலை- பிரகாஷ் ராவுக்கு போலீஸ் வலை வீச்சு

ஷா ஆலம், ஜூன் 8-  கிள்ளான், தாமான் செந்தோசா உத்தாமாவிலுள்ள வீடொன்றில் ஆடவர் ஒருவர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்காக இந்திய ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பி.பிரகாஷ் ராவ் அலியாஸ் ரைடர் (வயது 41) என்ற ஆடவரை தாங்கள் தேடி வருவதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சா ஹோங் ஃபூங் கூறினார்.

இந்த சந்தேகப் பேர்வழி குற்றச் செயல் தொடர்பாக நான்கு குற்றப் பதிவுகளையும் போதைப்பொருள் தொடர்பில் இரு குற்றப்பதிவுகளையும் கொண்டிருப்பதாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் 26ஆம் தேதி அச்சந்தேகப்பேர்வழி 34 ஆடவரை வீடொன்றில் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

அந்த ஆடவரின் உடலில் 27 காயங்கள் காணப்பட்டதோடு இடது கால் எலும்பும் முறிவு கண்டிருந்தது. இக்காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார் என ஏசிபி சா சொன்னார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், சந்தேகப் பேர்வழி குறித்து தகவல் அறிந்தவர்கள் 03-33762222 என்ற தொலைபேசி எண்களில் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தகவல் தரும்படி கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :