ECONOMYMEDIA STATEMENT

அடையாள பத்திரம் இல்லாமல் வாழ்க்கையை தொலைக்காதீர்கள் – விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

கோலசிலாங்கூர்  ஜூன் 20 ;– கோலசிலாங்கூர் பெஸ்தாரி ஜெயா  டேவான் ஓராங் ராமாயில்  ச்சாபாங் கெ அடிலான், ஊராட்ச்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும்  அரசு சாரா இயக்கங்களின்  உதவியுடன்  இளைஞர்களுக்கு  தொழில் வழிகாட்டி கருத்தரங்கு மற்றும்  அடையாளப்பத்திர  உதவி திட்டத்தை  ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 – மணி  தொடங்கி மாலை மணி 3:00 வரை  நடைபெற்றது.

இன்னும் நாட்டில்  பலர் முறையான அடையாள பத்திரங்களை கொண்டில்லாமல்  இருப்பதால்  அவர்கள் பல உரிமைகளை  இழந்து வருகின்றனர்  அவர்களுக்கு உதவும் வண்ணம் அடையாள பத்திர பதிவு நடைபெற்றது. இதற்கு  டிரா மலேசியா இயக்கம் தனது  ஒத்துழைப்பை வழங்கியது.

மேலும் எஸ்.பி.எம்.படித்து முடித்த மாணவர்கள் பரீட்சையில் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்காதவர்கள் அவர்களின்  அடுத்த  இலக்கான வேலைவாய்ப்பு சந்தைகளில் புக தக்க கைத்தொழில், அல்லது  தொழில் நிபுணத்துவ பயிற்சிகளுக்கு  விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப் பட்டார்கள்.

இந்நிகழ்வில்  கோலசிலாங்கூர் பி.கே.ஆர்.கட்சியின் தலைவர் திரு: தீபன் சுப்ரமணியம், கோலசிலாங்கூர் மாவட்ட மன்ற நகராண்மை கழகத்தினர் திரு: குணசேகரன் சுப்ரமணியம்,திருமதி: நந்தகுமாரி சிங்காரம், பி.கே.ஆர்.இளைஞர் பிரிவு மலேசிய இந்து சங்கம் வட்டார பத்தாங் பெர்ஜூந்தாய் வட்டார பேரவை துணைத் தலைவர்,மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :