MEDIA STATEMENTSELANGOR

சுங்கை துவா மாநில சட்டமன்ற தேர்தல் இயந்திரம் தொடங்கப்பட்டது, அமிருடின் சான்றிதழை பிடிஎம்மிடம் வழங்கினார்

செய்தி, சு. சுப்பையா

கோம்பாக், ஜூலை 9: அடுத்த மாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலை (பிஆர்என்) எதிர்கொள்ள சுங்கை துவா மாநில சட்ட மன்றத்திற்கான  ஒற்றுமை தேர்தல் இயந்திரம்  நேற்று இரவு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மாநில பக்கத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) தலைவர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் இங்குள்ள பத்து கேவ்ஸ் பொது மைதானத்தில் இந்த வெளியீட்டு விழா நடைபெற்றது.

துவக்கத்தின் அடையாளமாக, மாநில சட்டசபையின் ஆசனதாரராக உள்ள அமிருடின் மற்றும் பாரிசான் நேஷனலின் அத்தொகுதி  ஒருங்கிணைப்பாளர் ரஷீத் அஸ்பூர் ஆகியோர் வாக்களிக்கும் மாவட்டத்தின் மத்திய இயந்திரத்தின் பிரதிநிதியிடம் சான்றிதழை வழங்கினர்.

இன்றைய நிகழ்வில் பக்கத்தான் ஹராப்பானுடன், பி.என் ஒருங்கிணைப்பாளர் ரஷீத் அஸ்பூர் மற்றும் ம.இ.க. ம.சீ.ச., பி.பி.பி ஆகிய கட்சிகளின் தொகுதி தலைவர்களும் கலந்துக் கொண்டனர்.


Pengarang :