SELANGOR

சதுப்பு நிலப் பொழுதுபோக்கு பூங்காவில் புதிதாக 500 சதுப்புநில மரக்கன்றுகள் நடப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 28: சதுப்பு நிலக் காடுகள் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் வகையில், போர்ட் கிள்ளானில் உள்ள சதுப்பு நிலப் பொழுதுபோக்கு பூங்காவில் மொத்தம் 500 சதுப்புநில மரக்கன்றுகள் நடப்பட்டன.

“APM Springs Sdn Bhd“ வழங்கிய சதுப்புநில மரக்கன்றுகளை நடுவதற்கு சிலாங்கூர் கடல் வழி நுழைவாயில் (SMG) ஒத்துழைப்பையும் ஜூலை 22 அன்று பெற்றதாகக் கிள்ளான் மாநகராட்சி தெரிவித்தது.

கிள்ளான் மாவட்ட வன அலுவலகம் மற்றும் போர்ட் கிள்ளான் வனப்பாதுகாவலர் அலுவலகமும் இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கியதாக நோரைனி ரோஸ்லான் கூறினார்.

சதுப்புநில காடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

எம்.பி.கே.யின் மாதாந்திர  முழு கூட்டத்திற்கு நேற்று தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

70 ஏக்கர் சதுப்பு நிலக் காடுகளை உள்ளடக்கிய பூங்காவானது லாண்டசன் லுமாயன் எஸ்டிஎன் பிஎச்டினால் (எல்எல்எஸ்பி) உருவாக்கப்பட்டது மற்றும் ஜூலை 26 அன்று அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு திறக்கப் பட்டது.


முன்னதாக, RM10 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இந்த பூங்காவில் ஒரு சுராவ், கழிப்பறைகள், மீன்பிடி நடவடிக்கை, முகாம் மற்றும் ஓய்வு இடங்கள் ஆகியவை உள்ளன என்று உள்கட்டமைப்பு எஸ்கோ இஷாம் அசிம் கூறினார்.


Pengarang :