கோலசிலாங்கூர் ஆகஸ்ட் 2 ;- கடந்த சனிக்கிழமை கோலசிலாங்கூர் ஸ்டேடியம் உள் அரங்கில் பாக்காத்தான் ஹரப்பான் -பெரிக்காத்தான் நேஷனல் இடையிலான வேட்பு மனு தாக்கல் இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது .
அதனை தொடர்ந்து அன்று முதல் இன்று வரையிலும் தனது ஆதரவாளர்களை திரட்டி வாக்கு வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ளார் எண்: 1 – பாக்காத்தான் ஹரப்பான் புக்கிட் மெலாவத்தி வேட்பாளர் தீபன் சுப்ரமணியம்
ஒற்றுமையுடன் அனைவருடனும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் இவர் எல்லா இன மக்களையும் மரியாதையுடனும் சந்தித்து பேசி வாக்கு வேட்டையாடி வருகிறார் .
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2023/08/7-7-500x333.jpg)
அந்த வரிசையில் தனது ஆதரவாளர்களுடன் நேற்று தாமான் ஸ்ரீ குவந்தான் குடியிருப்பு பகுதிகளிலும், மன்மோத் தோட்டப் பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
எல்லோரிடமும் இனம் மதம் பார்க்காமல் மக்களின் குறைகளை கேட்டறிந்து , பக்காத்தான் ஹரப்பான் மாநில அரசின் வெற்றிகளை சொல்லி மக்களின் ஆதரவை வேண்டுகிறார். இந்த முறை தனது எண்: 1 -க்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்ய வேண்டி கேட்டுக் கொண்டார்.
தனது ஆதரவாளர்கள் மக்கள் குரலை செவிமடுத்து சுறுப்பாக கள பணியாற்றுவதாக கூறினார். புக்கிட் மெலாவத்தி N10 தொகுதியின் 1எண் வேட்பாளர் தீபன் சுப்ரமணியம் என்பதை மக்களுக்கு எடுத்து சொல்லி ஹரப்பான் சின்னத்திற்கு வாக்களிக்க அவரும் மக்களை கேட்டுக்கொண்டார்..