ALAM SEKITAR & CUACANATIONAL

சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் நண்பகல் வரை மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், செப்டம்பர் 22: சிலாங்கூரில் 4 மாவட்டங்களில் மதியம்  வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் மாவட்டங்கள் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இதே வானிலை பினாங்கு முழுவதும்  மற்றும் கெடா, பேராக் மற்றும் சபாவில் உள்ள சில பகுதிகளிலும் தொடரும்  என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும். மேல்  விபரங்களுக்கு  பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தை வலம் வரலாம்,  சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு   சமூக ஊடகங்களைப் பார்க்கவும், myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும்


Pengarang :