NATIONAL

நவம்பர் 4 ஆம் தேதி ஜெபாக் தொகுதி இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புத்ராஜெயா, செப் 25 – சரவாக் மாநிலத்தின்
ஜெபாக் சட்டமன்றத் தொகுதிக்கான
இடைத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் தேதி
நடைபெற தேர்தல் ஆணையம் தேதி
நிர்ணயித்துள்ளது.

வேட்பு மனுத்தாக்கல் மற்றும்
இடைத்தேர்தலுக்கான முதல்கட்ட
வாக்களிப்பு முறையே அக்டோபர் 21 மற்றும்
அக்டோபர் 31ஆம் தேதிகளில் நடைபெறும்
என தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர்
டாக்டர் அஸ்மி ஷரோம் கூறினார்.

இடைத்தேர்தல் தொடர்பான முக்கியத்
தேதிகளை நிர்ணயிப்பதற்காக இங்குள்ள
மெனாரா எஸ்.பி.ஆர். தலைமையகத்தில்
இன்று நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்குத்
தலைமை தாங்கிய பின்னர் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்
தெரிவித்தார்.

ஜெபாக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ
தாலிப் ஜூல்பிலிப் கடந்த செப்டம்பர் 15ஆம்
தேதி காலமானதைத் தொடர்ந்து அந்த
தொகுதியில் இடைத் தேர்தல்
நடைபெறுகிறது.

72 வயதான தாலிப் சிறுநீரக நோய்
காரணமாகச் செப்டம்பர் 14 ஆம் தேதி மாலை
5.50 மணியளவில் மருத்துவ மையம் ஒன்றில்
உயிரிழந்தார்.


Pengarang :