கோலாலம்பூர், அக் 13- நாடாளுமன்றத்தில் இன்று 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
“இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லதரசு“ என்ற குறளை அவர் வாசித்த போது அவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டி தங்களின் மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.
பின்னர் அவர், முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்க கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்து திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும் என அந்த குறளுக்கான விளக்கத்தையும் கூறினார்