ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

இந்தோனேசியாவின் பண்டா கடலில் நிலநடுக்கம்- சுனாமி அபாயம் இல்லை

கோலாலம்பூர், டிச 3-  இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியை ரிக்டர் அளவில் 5.8 எனப் பதிவான நில நடுக்கம் நேற்றிரவு 8.01 மணியளவில் உலுக்கியது.

இந்தோனேசியாவின் அம்போன் நகரிலிருந்து  தென்கிழக்கே 422 காலோ மீட்டர் தொலைவில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்ததாக  மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிக்கை ஒன்றில் கூறியது.

இந்த நிநடுக்கத்தால் மலேசியாவில் சுனாமி ஏற்பட சாத்தியமில்லை என்பதை தொடக்கக்கட்ட மதிப்பீடுகள் காட்டுகின்றன.


Pengarang :