EKSKLUSIF -MEDIA STATEMENT

நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஐக்கிய அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிய ஆண்டு 2023

2022 ஆம் ஆண்டின் இறுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டணியின் விளைவாக உருவாக்கப்பட்ட ஐக்கிய அரசாங்கம் 2023 ஆண்டு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அரசியல் ஸ்திரத்தன்மை குலைக்கும் 3R (மதம், இனம் மற்றும் அரண்மனை) பிரச்சினைக்கும்,  ரிங்கிட் மதிப்பு குறைவு, பொருட்களின் விலை உயர்வு போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  தலைமையிலான நிர்வாகம், போராடி வருகிறது.

எவ்வாறாயினும், தொற்று நோய்க்கு பிந்தைய பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டின் வெளியுறவுக் கொள்கையை வலுப்படுத்திய கூட்டாட்சி பட்ஜெட் விளக்கக் காட்சியான மடாணி மலேசியாவை அறிமுகப்படுத்தி பல தடைகளை ஒவ்வொன்றாக தகர்த்து வருகிறது.

1963 மலேசியா ஒப்பந்தத்தில் நிலுவையில் உள்ள பல சிக்கல்களை தீர்ப்பதில் தொடங்கி, சரவாக் மற்றும் சபாவின் நம்பிக்கையைப் பெறுவதில் அன்வார் வெற்றி பெற்றதன் வழி ஒற்றுமை அரசாங்கத்தை பலப்படுத்தினார்.

நாட்டு மக்களைப் பெரிதும் பாதிக்கும் முக்கியப் பிரச்சனைகளை கையாள்வதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவற்றுள் அலிபாபாவுக்கு எதிரான கொள்கையும் முற்போக்கான சம்பளக் கொள்கையும் பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருப்பதில் ஒன்றாகும்..

ஐரோப்பிய நீதிமன்றங்களில் தேசிய சொத்துக்களை கைப்பற்றுவதற்கான சூலு குழுவின் கூற்றை நிராகரிப்பதிலும் மலேசியாவின் வெற்றி, ஒற்றுமை அரசாங்கத்தின்  ஆக்க திறன்  மற்றும் வெளியுறவுக் கொள்கையின் செயல்திறனை நிரூபிக்கிறது.

மேலும், பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அன்வாரின் உரத்த குரல் சர்வதேச கவனத்தையும் ஈர்த்தது மற்றும் முஸ்லிம் நாடுகளில் மலேசியாவின் செல்வாக்கை அதிகரித்தது.

அக்டோபர் 24 அன்று கோலாலம்பூரில் உள்ள ஆக்ஸியாட்டா அரங்கில் மலேசியாவுடன் பாலஸ்தீனம் இணைந்து நடத்திய கூட்டத்தில், பாலஸ்தீன மக்களுக்காகப் போராடியதற்காக சில நாடுகளிடமிருந்து கண்டனங்களையும், அச்சுறுத்தல்களையும், அழுத்தங்களைப் பெற்றதை பிரதமர் வெளிப்படுத்தினார்.

இருப்பினும், 2023 நவம்பர் 14 முதல் 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (ஓபெக்) மாநாட்டின் போது உலகத் தலைவர்களுடன் அன்வார் இந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதை அது தடுக்கவில்லை.

அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) – பாரிசான் நேஷனல் (பிஎன்) கூட்டணி ஆறு மாநிலத் தேர்தல்களுடன் இந்த ஆண்டு அரசியல் களத்தை சூடு ஏற்றியது.

ஆறு மாநில தேர்தல் பிரச்சாரத்தில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி எம்.டி நூரின் அவமரியாதையான உரை நாட்டின் கவனத்தை ஈர்த்தது, அவர் சிலாங்கூரின்  டத்தோ மந்திரி புசார் நியமனம் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தை அவரது அரசியல் பேச்சில்  சாடியதை  மறுத்தார்.

சிலாங்கூர் அரச மன்ற உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார், ஜூலை 18 அன்று அவர் மீது தூண்டுதல் குற்றச்சாட்டில் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆறு மாநில தேர்தலுக்குப் பிறகு, முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தனது பதவியை ஊழலுக்குப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து ஆகஸ்ட் 15 அன்று விடுவிக்கப் பட்டார்.

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, அக்கால்புடி அறக்கட்டளைக்கு சொந்தமான நம்பிக்கை மோசடி, ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டில் செப்டம்பர் 4 அன்று விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் மாதத்தில்  சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறிப்பாக  ”அம்னோ”அவர்களின் ஆதரவை PN க்கு மாற்றுவார்கள் என்று வதந்திகள் இருந்தாலும், அம்னோ தலைவர்கள் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.

அதே வேளையில், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) வின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பிரதமரின்  செயல்முறையை மெச்சி கட்சி-தாவல் மீதான தடை  இருந்தும், அவர்கள் பிரதமரை ஆதரிக்கும் முடிவு  எடுத்ததால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் ஆதரவை  பெற்று  ஒற்றுமை அரசு  வலுப்பெற்றுள்ளது.

இந்த வலுவான ஆதரவானது உயர்மட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை மேற்கொள்ள அரசுக்கு உதவுகிறது. இந்த ஆண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட, குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 7 அன்று, மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (MACC) முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான், 48 மற்றும் மற்றொரு நபரான மன்சூர் சாத், 69 ஆகியோரைக் கண்டுபிடிக்க முயன்றது.

ஒரு அமைச்சகத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களை பதிவு செய்தல், ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் பயோமெட்ரிக் சேமிப்பு தொடர்பான திட்டத்துடன் தொடர்புடைய ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றிய விசாரணையில் அவர்கள் உதவ வேண்டும்.

இருப்பினும், குடிநுழைவு துறையுடனான MACC இன் மதிப்பாய்வு, அவர்கள் முறையே மே 17 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் மலேசியாவை விட்டு வெளியேறியதாகவும், மீண்டும் நாட்டிற்குள் நுழைந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை என்றும் கண்டறியப்பட்டது.

நவம்பர் 9ஆம் தேதி, கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தால், நம்பிக்கை மீறல், சொத்துக்களைத் தவறாக பயன்படுத்தியது மற்றும் பண மோசடி ஆகிய குற்றங்களுக்காக மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மானுக்கு ஏழு ஆண்டுகள் சிறை, இரண்டு கசையடிகள் மற்றும் RM 10 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்ததாக, முன்னாள் நிதியமைச்சர் துன் டைம் ஜைனுதீன் தனது சொத்துக்களை அறிவிப்பதில் ஒத்துழைக்க மறுத்ததை அடுத்து, கோலாலம்பூரில் உள்ள மெனாரா இல்ஹாமை எம்ஏசிசி பறிமுதல் செய்தது.

இந்த ஆண்டுக்கான திரையை மூடும் பெரிய செய்திகளில் ஒன்றாக கோழி விலை உயர்வுக்கு இட்டுச்செல்லும் கோழி தீவன கார்டலுக்கு மலேசிய போட்டி ஆணையம் RM 415.5 மில்லியன் அபராதம் விதித்தது.


Pengarang :