இந்நிகழ்வு செந்தோசா தொகுதி வாக்காளர்களுக்கு மட்டும், குறிப்பாக 2017 ம் ஆண்டில் பிறந்த குழந்தைகளுக்கு இம்மாதம் பிப்ரவரி 19 முதல் இந்த உதவிக்கான குறுஞ்செய்தி அழைப்பை பெற்றுள்ளனர் என தாவாஸ் கூறியது. செந்தோசா சட்டமன்ற சமூக சேவை மையத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் நிகழ்வில் உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்குப் பள்ளி பை, தண்ணீர் போத்தல், உணவு பாத்திரம் போன்ற பள்ளி உபகரணங்கள் வழங்கப்படும். இந்த உதவி பெற்றோர்களின் சுமையைக் குறைக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், குடியிருப்பாளர்கள் தத்தம் தொகுதியில் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
தாவாஸ் உறுப்பினர்கள் பள்ளி நுழைவு உதவி திட்டத்தைப் பெற தாவாஸ் செயலியை உடனே பதிவிறக்கம் செய்யவும். மேலும், பிற தொகுதிகளில் இந்த உதவியைப் பெறும் உறுப்பினர்களுக்கு அவ்வவ்போது தகவல்கள் தெரிவிக்கப்படும் என தாவாஸ் கூறியது.