SELANGOR

இன்று அரசு ஊழியர்களிடம் மந்திரி புசார் முக்கிய உரையை ஆற்றுவார்

ஷா ஆலம், மார்ச் 22: இன்று அரசு ஊழியர்கள் கலந்து கொள்ளும் ரம்ஜான் மடாணி மஹாபா நிகழ்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முக்கிய உரையை நிகழ்ந்த உள்ளார்.

மாநில நிர்வாகக் கட்டிடத்தின் வெள்ளி விழா அரங்கில் காலை 8 மணிக்குத் தொடங்கும் ரம்ஜான் தஸ்கீராவில் பங்கேற்பதோடு, முடாஹ்னியா பெர்வகாஃப் பிரச்சாரத்தையும் அவர் தொடங்குவார்.

இந்நிகழ்ச்சியில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், மாநில நிதி அதிகாரி டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அகமட் தாஜுடின் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

மீடியா சிலாங்கூர் முகநூல் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியைப் பொதுமக்கள் காணலாம்.


Pengarang :