MEDIA STATEMENTNATIONAL

பத்தாங் காலியில் இன்று நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பு- பொது மக்கள் பங்கேற்க பிரதமர் அழைப்பு

கோலாலம்பூர், ஏப் 12- உலு சிலாங்கூர், பண்டார் உத்தாமா பத்தாங் காலி பள்ளிவாசலில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ள நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த பள்ளிவாசலில் வட்டார மக்களுடன் இணைந்து வெள்ளிக்கிழமை தொழுகையிலும் தாம் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

ஷவால் மாதத்தை குதூகலத்துடன் கொண்டாடும் இத்தருணத்தில் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்ட ஒன்று திரண்டு வாருங்கள் என அவர் அந்த பதிவில் அழைப்பு விடுத்துள்ளார். 


Pengarang :