SUKANKINI

விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கம் SAM 100PLUS விருதுகளில் முன்னணியில் இருப்பவர்களில் சிவசங்கரி

கோலாலம்பூர், மே 31 – மலேசியாவின் விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கம் SAM 100PLUS 2023 ஆம் ஆண்டின் சிறந்த தடகள விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆறு தடகள வீரர்களில் தேசிய ஸ்குவாஷ் ஏஸ் மற்றும் 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எஸ். சிவசங்கரியும் ஒருவர்.
இங் யென் யாவ் Ng Eain Yow (ஆண்கள் ஸ்குவாஷ்), வுஷூ வெற்றியாளர் வோங் வெங் சூன், உலக டென்பின் பந்துவீச்சு சாம்பியன் நடாஷா மொஹமட் ரோஸ்லான் மற்றும் பெண்கள் புல்வெளி பந்துவீச்சு ஜோடி நூர் அய்ன் நபிலா Nur Ain Nabilah Tarmizi மற்றும்  அலினா அஹ்மாட்  நவாவி  ஆகியோர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றவர்கள்.
நாட்டின் விருதுகள் மேடையை வழக்கமாக அலங்கரித்த இரண்டு தேசிய பாரா-தடகள வீரர்கள், பவர்லிஃப்டிங்கிலிருந்து போனி புன்யாவ் கஸ்டின் மற்றும் பேட்மிண்டன்  சிச்யா லிக் ஹாவ் , 2023 ஆம் ஆண்டின் சிறந்த பாரா விளையாட்டு வீரருக்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
“ஹாங்காங்கில் நடந்த ஆசியா-ஓசியானியா போசியா உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாரா-தடகள வீராங்கனை நூர் அஸ்குசைமி மஸ்த் சலீம் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், சிறந்த பாரா தடகள விருதுக்கான பட்டியலிலும் அவர் சேர்க்கப்பட்டார்” என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
SAM 100PLUS விருதுகள் 2023 இன் தலைவர் ஹஸ்ரீன் முபாரக், 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் பட்டியலில் பல புதிய முகங்களை உள்ளடக்கும் என்று கூறினார், மலேசியா அதன் தரவரிசையில் பல மெருகூட்டப்படாத வைரங்களைக் கொண்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
“நாட்டில் உள்ள விளையாட்டு ஊடகவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் SAM, SAM-100PLUS விருதுகளில் இரண்டு பிரிவுகளின் மூலம் வழங்கப்படும் அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள், ‘டெமி மலேசியா’ முழக்கத்தை பின்பற்றுவதற்கு பிராந்திய மற்றும் உலகளாவிய நிலைகளில் தங்கள் திறமைகளை தொடர்ந்து நிரூபிக்க இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் என்று நம்புவதாக அவர் சொன்னார்.
SAM 100PLUS விருதுகள் 2023, ஜூன் 6 ஆம் தேதி ஸ்ரீ பசிபிக் ஹோட்டலில் திட்டமிடப்பட்டுள்ளது, மொத்தப் பரிசுத் தொகையாக RM50,000 வழங்கும் விருதுகளை வழங்கி விளையாட்டு எழுத்தாளர்களை கௌரவிக்கிறது.
சிறந்த அச்சு அறிக்கை, சிறந்த மின்னணு ஊடக அறிக்கை, சிறந்த அச்சு ஊடக வர்ணனை, சிறந்த மின்னணு ஊடக வர்ணனை, சிறந்த சிறப்பு அறிக்கை மற்றும் சிறந்த புகைப்பட விருது என ஆறு பிரிவுகளாக விருதுகள் பிரிக்கப்படும்.
விளையாட்டு எழுத்தாளர்கள் பிரிவில் சிறந்த ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பை மற்றும் RM7,000 ரொக்கத்தை உள்ளடக்கிய சீபல் விருதைப் பெறுவார்.
விருதுகள் இரவு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெறவுள்ளது

Pengarang :