ஷா ஆலம், மே 1:
மலேசிய தொழிற்சங்கம் (எம்டியுசி) 2017-ம் ஆண்டு தொழிலாளர் தினத்தில் இந்நாட்டில் வாழும் தொழிலாளர் நலத்திற்காக 13 அடிப்படை கூறுகளை உள்ளடக்கிய திட்டங்களை கோடி காட்டியுள்ளது.
தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர், ஜெ. சோலமன் கூறுகையில் அதில் தொழிலாளர் சேமநிதி வாரிய சட்டமும் அடங்கும் எனவும் இது தொழிலாளர் சேமிப்பை, வாரியம் தவறான முறையில் பயன்படுத்துவதை தடுப்பதோடு அதன் முதலீடுகள் தொழிலாளர்களை சுரண்டாமல் இருப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் சேமநிதி ஒன்று மட்டும் தான் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டமாகும், ஆக சோலமன் மேலும் விவரிக்கையில் எம்டியுசி 2016-கான ஈவுத்தொகையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
” வாழ்க்கை செலவீனங்கள் அதிகரிக்கும் வேளையில், தொழிலாளர்களின் உண்மையான உழைப்பை பிரதிபலிக்கும் வகையில் ஓய்வூதியம் இருக்க வேண்டும்,”என்று கூறினார்
எம்டியுசி பிப்ரவரி 2016-இல் சேமநிதி வாரியம் அறிவித்துள்ள ஈவுத்தொகையை மேற்கோள்காட்டி, 5.7% மட்டுமே வழங்கப்பட்டதும் எனவும் ஆனால் 2015-இல் இது 6.4% இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொழிற்சங்கம், சேமநிதி வாரியம் லாப அளவில் அதிகமாக பதிவு செய்திருக்கும் வேளையில் 2015-ஐ விட அதிக ஈவுத்தொகையை அறிவித்து இருக்க வேண்டும் என்றார்.
மேலும் சோலமன் கூறுகையில், எம்டியுசி அடிப்படை ஊதியம் ரிம 1500-ஆக உயர்த்தப் பட்டுள்ளது வேண்டும் எனவும் கோலா சிறப்பு நிதி ரிம 300-ஐ பி40 மற்றும் எம்40 வர்க்கத்திற்கு அளிக்கப்படும் பொது பொருளாதார நீதி ஏற்பட வழி வகுக்கும் என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில், எம்டியுசி மலிவு விலை வீடமைப்புத் திட்டம் மற்றும் வங்கி கடன் வட்டி விகிதம் குறைந்த அளவில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.
“Di samping itu, pekerja asing haus diberi hak sama rata serta hak untuk menyertai kesatuan,” katanya.
–