MEDIA STATEMENT

உடனடி நடவடிக்கை, பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி அமாட் வெளியிட்ட  அறிக்கையின் வாயிலாக உயரிய பொறுப்பு வகிக்கும் அரசியல் வாதிகளின்  ஊழல் வழக்குகள் பொதுத் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்று மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

ஊழல் தடுப்பு ஆணையம் எந்த ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையத்தின் நடவடிக்கை நேரம், சம்மந்தப்பட்டவர்கள் யார், பிரதமர் ஆனாலும், ஊழல் தொகை சிறியது அல்லது பெரியது என்று பார்க்கக் கூடாது.

ஒருமைப்பாடு, கண்ணியமான மற்றும் பாரபட்சம் பார்க்காத  ஒரு ஆணையமாக  எந்த வகையிலும் செயல்பட வேண்டும்.  ஊழல் சமுதாயத்தில் ஒரு மோசமான அம்சமாக கருத வேண்டும், ஆக  உடனடி நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது.

ஊழல் வழக்கில் யாராக இருந்தாலும், என் கட்சிகாரர்களாக இருந்தாலும் அல்லது  ஆளும் கட்சியாக இருந்தாலும், நாம் மக்களுக்கு நேர்மையை வாழ்க்கை மற்றும் நிர்வாகத்தில் கடைப்பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.  ஆக  ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து  ஊழல் புரியும் அனைவரையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

டாக்டர் முஜாஹிட் யூசோப் தாவா

பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர்


Pengarang :