NATIONAL

அஸ்மின்: துணைப் பிரதமராக தேர்ந்தெடுத்தப் பட்டதை நினைத்து ஜாஹிட் பெருமை வேண்ட

பாகான் டத்தோ, ஜூலை 22:

துணைப் பிரதமராக நியமனம் பெற்றதை நினைத்து டத்தோ ஸ்ரீ அமாட் ஜாஹிட் ஹாமிடி பெருமிதம் கொள்ள வேண்டாம் என்று கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார்.

டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தைரியத்துடன் வெளிப்படையாக நஜிப் ரசாக்கின் ஊழலை எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாஹிட் ஹாமிடிக்கு இந்த பதவி கிடைத்தது என்று தெரிவித்தார்.

”  ஜாஹிட், அம்னோ உறுப்பினர்கள் உங்களை துணைப் பிரதமராகவோ அல்லது அம்னோவின் துணைத் தலைவராகவோ தேர்ந்தெடுக்கவில்லை மாறாக டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் தைரியத்தால் இந்த பதவிகள் கிடைத்தன.முஹிடின் யாசின் நஜிப், அம்னோ மற்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தை நேரிடையாக ஊழலை எதிர்த்து குரல் கொடுத்தார். நான் டான்ஸ்ரீ முஹிடின் யாசினை மதிக்கிறேன். அம்னோ உறுப்பினர்கள் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். ஆனாலும் ஊழல்,கொள்ளையடிக்கும், பதவி துஷ்பிரயோகம், நன்னடத்தை குறைந்த தலைவரான பிரதமர் நஜிப் ரசாக்கை எதிர்த்து பொறுப்புள்ள தலைவராக முஹிடின் விளங்குகிறார்,” என்று டத்தோ முகமட் ஜம்ரா, சுங்கை சூமூன், பாகான் டத்தோவில் நடந்த பேராக் மாநில கெஅடிலான் கட்சியின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்.

கடந்த 13வது பொதுத் தேர்தலில் பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் சிறிய அளவிலான ஓட்டுகளில் வெற்றி பெற்றதை ஜாஹிட் ஹாமிடி மறந்து விட வேண்டாம் என்று நினைவு படுத்தினார். நஜிப் ரசாக்கின் தவறுகளை தடுக்காமல், எதிர்த்து குரல் கொடுக்காமல் இருக்கும் ஜாஹிட்டின் நடவடிக்கைகளை மலேசிய நாட்டு மக்கள் கண்டு வருகிறார்கள் என்பதை சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி சுட்டிக் காட்டினார்.

#கேஜிஎஸ்


Pengarang :