SELANGOR

மகாகுரு ஸ்ரீ டாக்டர் எஸ். ஆறுமுகம் சுழற்கிண்ண சிலம்பப்போட்டி

கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய நிலையிலான மகாகுரு ஸ்ரீ டாக்டர் எஸ். ஆறுமுகம் சுழற்கிண்ண சிலம்பப்போட்டி சிப்பாங் மண்டபத்தில் நடைபெற்றது. சிப்பாங் மாவட்ட சிலம்பக் கழத்தினர், சிப்பாங் நகராண்மைக் கழக உறுப்பினர் திரு.பெ. சிவக்குமார் அவர்களின் துணையோடு இணைந்து இப்போட்டியினை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போட்டியில் ஏறக்குறைய இருநூறு சிலம்ப மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர்களிடையே கட்டொழுங்கையும் தற்காப்புக் கலையின் உன்னதத்தையும் விதைப்பதே இப்போட்டியின் முக்கிய நோக்கமாகும். இப்போட்டியின் சிறப்பு விருந்தினரான இந்தோனேசியா, ஆச்சேயின் ஆட்சியாளரும், டத்தோ ஸ்ரீ சிஹான் வேணுகோபால், டத்தோ டாக்டர் சித்ரா, டிஎச்ஆர் ராகா அறிவிப்பாளர் திரு. கவிமாறன் மற்றும் சிலம்ப ஆசான்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இப்போட்டியில் முதல்நிலையில் சிப்பாங் சிலம்பக் குழுவினர் வாகை சூடினர். இரண்டாவது நிலையில் கோலலங்காட் குழுவினரும், மூன்றாவது நிலையில் கிள்ளான் குழுவினரும் வெற்றிப் பெற்றனர்.

இப்போட்டியில் நிறைவுரை வழங்கி ஆச்சேயின் ஆட்சியாளர் சிலம்பத்தை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டுமென கேட்டுக் கொணடார். இறுதியாக மகாகுரு ஸ்ரீ டாக்டர் எஸ். ஆறுமுகம் அவர்களுக்கு டத்தோ ஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார்.


Pengarang :