SELANGOR

பெர்சியாரான் பூச்சோங் ஜெயா செலாத்தான் சாலை மேம்படுத்த நடவடிக்கை

கின்ராரா, டிசம்பர் 15:

சாலையை பயன்படுத்துவோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் பெர்சியாரான் பூச்சோங் ஜெயா செலாத்தான் பகுதி சாலைகள் மேம்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கொள்ளப்படும் இச்சாலை மேம்பாட்டு நடவடிகளினால் பாதுகாப்பினை உறுதி செய்வதோடு அஃது சாலை நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதிடு விபத்துகளையும் தவிர்க்க வழிகோலும் என சட்டமன்ற உறுப்பினர் ங் ஸ்க்ஷெ ஹன் தெரிவித்தார்.

இவ்வட்டாரத்தின் பெரும் பகுதிகள் நான்கு சந்திப்பு சாலைகளை கொண்டிருப்பதோடு சாலை சமிஞ்சை விளக்குகளும் இல்லை.இது பெரும் ஆபத்தானது என்று கூறிய அவர் இவ்விடத்தில் விவேகமான நிலையில் சாலை சமிஞ்சை விளக்கை பொருத்துவது அவசியம் என்றார்.
அதேவேளையில்,இங்கு அமைந்திருக்கும் சாலைகள் மேடாகவும் குன்றாகவும் இருப்பதால் மழை நேரங்களில் அஃது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.மேலும்,சாலை நெரிசல் என்பது எல்லா காலக்கட்டத்திலும் இங்கு நிலவுவதோடு மட்டுமின்றி விபத்துகளும் நிகழ்வதால் விவேகமான தீர்வு அவசியமாவதாக அவ்விடத்தை பார்வையிட வந்த போது சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

இந்நிலையில்,இங்கு நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவிருக்கும் சாலை மேம்பாடு மற்றும் சீரமைப்புகளின் மொத்த செலவினத்தையும் ஐ.ஒ.ஐ குழுமத்தினர் சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :