SELANGOR

ஜமால் மூன்று நாட்களுக்கு காவலில் வைக்கப் பட்டார்

ஷா ஆலம், மே 23:

சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஸ்ரீ ஜமால் முகமட் யூனூஸ் நேற்று சிலாங்கூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த மே 12-இல் செக்சன் 24, பயங்கரவாத ஆயுதம் 1960 சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்களை சிலாங்கூர் மாநில காவல்துறை  குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் எஸ்ஏசி பாஃசில் அமாட் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில காவல்துறையின் தலைமையகம், 47-வது வயதுடைய ஜமாலை அம்பாங்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நண்பகல் 1.15-க்கு கைது செய்ததை உறுதிப் படுத்தியது.


Pengarang :