SELANGOR

ஹிஜ்ரா கடனுதவி : இனி தாமதமாகாது

ஷா ஆலம், ஜன.25:

ஹிஜ்ரா சிலாங்கூர் மைக்ரோ கிரேடிட் கடனுதவித் திட்டத்தில் கடனுதவியை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தற்போது முழுமையாகத் தீர்க்கப்பட்டுவிட்டது.

இந்தத் திட்டத்திற்கு கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்ததே தாமதத்திற்கான முக்கிய காரணமாகும். இந்த் விண்ணப்பங்களுக்கான கடனுதவி வழங்கும் பட்டியல் மறு சீரமைக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இந்தத் தாமதததிற்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறிப்பாக 14ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதே காரணம் என்று அவர் சொன்னார்.

இந்த கடனுதவிக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து அவற்றை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் கடனுதவியை விண்ணப்பதாரர்களுக்கு வழங்குவதில் தாமதமாகியது என்று அவர் விளக்கமளித்தார்.


Pengarang :