NATIONAL

பிளஸ் நிறுவனம் சம்பந்தமாக மாஜூ ஹோல்டிங்ஸின் பரிந்துரை: மதிப்பீடு செய்யப்படுகிறது

கோலாலம்பூர், ஆக.26-

நாட்டின் மிகப் பெரிய நெடுஞ்சாலை நிறுவனமான வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிறுவனத்தை (பிளஸ்) மாஜூ ஹோல்டிங்ஸ் நிறுவனம் எடுத்துக் கொள்ளும் பரிந்துரை மீது மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக பொதுப்பணி துறை அமைச்சு தெரிவித்தது.

டோல் கட்டணத்தைக் குறைக்கும் வாய்ப்பை உட்படுத்தும் சம்பந்தப்பட்ட பரிந்துரை அரசாங்கத்தைக் கவர்ந்துள்ளதாக அமைச்சின் அறிக்கை கூறியது.

மாஜூ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பரிந்துரையை அமைச்சு பெற்றுள்ளதாக குறிப்பிட்ட பொதுப்பணி அமைச்சர் பாரு பியான், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல் நடவடிக்கை திறன் குறித்து மதீப்பீடு செய்யப்படுவதாக சொன்னார்.

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சுயேட்சை கணக்காய்வாளர்கள் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதத் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :