அம்பாங் செப்.30-
அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் வரும் 2020 ஆம் ஆண்டுக்கான வர்த்தக லைசென்ஸை iCOMM முறை வழி புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
2019 டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பின்னர் லைசென்ஸைப் புதுப்பிப்போருக்கு தாமதமாக லைசென்ஸைப் புதுப்பித்ததற்கான அபராதம் விதிக்கப்படும் என்று எம்.பி.ஏ.ஜே தலைவர் டத்தோ அப்துல் ஹமிட், உசேன் தெரிவித்தார்.
ஸ்மார்ட் சிலாங்கூர் நோக்கத்திற்கு ஈடான iCOMM முறை கடந்த 2018 ஆண்டு முதல் அமலில் உள்ளது. அதோடு, லைசென்ஸைப் புதுப்பித்துக் கொள்வதற்கு ஏதுவாக எம்.பி.ஏ.ஜே கட்டடத்தில் மின்சார இயந்திரமும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
“வர்த்தக லைசென்ஸ் புதுப்பிப்பு முகப்பிடத்தில் ரொக்கம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா என்பதால் வர்த்தகர்கள் இணையம் வழி தங்களின் லைசென்ஸூகளைப் புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.